விட்டு கொடு நாம் வெற்றி பெற

மாமனுக்கும் மச்சானுக்கும் சண்டை!
குடும்பத்திற்கும் குடும்பத்திற்கும் சண்டை !
குலத்திற்கும் குலத்திற்கும் சண்டை !
ஜாதிக்கும் ஜாதிக்கும் சண்டை !
மதத்திற்கும் மதத்திற்கும் சண்டை !
மேலத்தெரு கீலத்தெரு சண்டை!
ஊருக்கும் ஊருக்கும் சண்டை!
நாட்டிற்கும் நாட்டிற்கும் சண்டை!
செயற்கைக்கும் இயற்கைக்கும் சண்டை!
கடலுக்கும் நிலத்திற்கும் சண்டை!

இந்த சண்டையை ஏற்படுத்துபவன் யார் என்று அறிவேன்!

நாம் சண்டையிட்டு கொள்கையில் அவன் சந்தோஷமடைகிறான்.
நாம் சண்டையிட்டு சாவதே அவனது வெற்றி என நினைக்கிறான்.

நான் தோல்வியுற நினைக்கிறேன் என் எதிரியிடம்
என் எதிரி வெற்றியடைந்தாலும் அவனை வெற்றியடைய செய்யமாட்டேன்!

எழுதியவர் : மன்சூர் (22-Jun-17, 12:22 am)
பார்வை : 1880

மேலே