குறுங்கவிதை
பூங்காற்று விரும்புமா !
பூங்காற்று விரும்புமா !
பாங்குடனே பேசிடுமா !
நீங்காதே என்னவளே !
நிம்மதியும் போகிடுமே !
தாங்கிடுவேன் உந்தனையும் !
தழைக்கட்டும் காதலுமே !
யாங்கணுமே நினைவலைகள் !
யாரிடமே சொல்லிடுவேன் !
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்