உயிர்தந்து உனை புதுப்பிக்கிறேன் தமிழன்னையே கரம்கொடுக்க வா...!

கடல்களின் அலைகளில் அமைதிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பேரலைகள்போல
கருவுற்ற பெண்ணின் வயிர்கிழிக்கும் கலவரபூமிதனில் இனியும் காந்தியம் சாத்தியமேனால்..?
இடற்பாடுகள் நிறைந்த அடர்ந்த காடுகளினுடே எங்கோவொரு ஒற்றையடிப் பாதையின் ஓரத்தில்
மடந்தையொருத்தியின் உடைந்த வளையல் துண்டுகளிலும் காய்ந்த கதம்பச் சரங்களிலும் கண்ணகித்துவம் இனியும் அரங்கேருமேயானால்...
அரியணை அமர்த்த அரசமரத்தடி ஆனைமுகத்தான் அயர்ந்துறங்கும் வேளையில்
பிரிவினைமட்டுமே பேசிப்பேசி ஓய்ந்த
சாதீயத்தின் முன்னே பெரியாரிசம் இனியும் பேசப்படுமேயானால்...
அழித்துவிடுகிறேன் என் இறுதி அத்தியாயத்தை
ஆழப்பதித்த தேசியத்திற்கு அடிமைத் தமிழனாய்
வாழத் தகுதியல்லயென வேசிகளின் புதல்வர்களுக்கு வாக்குகொடுத்துவிட்டு...
எரியும் என் சடலத்தின்மீது கிழித்தெறிந்து சாம்பலாக்கிவிடுங்கள்
எழுதிய எம்தமிழ் வரிகளெல்லாம் இனியும் வாழத் தகுதியற்றதென்று...