இல்லாமையின் பெருங்காதல்

இரவுகள்
வருவதும் போவதுமாய் இருக்கிறது

இதே நாற்காலியில்தான்
தினமும் இப்படி வெறித்து பார்க்கிறேன்

தனிமை எனக்கிட்டிருக்கும்
இந்த நாற்காலியை
உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்

இல்லாமையின் பெருங்காதலோடு
எளிய சிரிப்பையாவது சிந்திவிடுங்கள்

வெடித்துடைந்து நிறம் மாறட்டும்
இவ்விரவு

எழுதியவர் : கோபி சேகுவேரா (14-Jul-17, 5:36 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 97

மேலே