இடர்ப்பாடி
மழையை வேண்டினோம்
காற்றுக் கூட இல்லை,
வெயில் சுட்டது.
சொர்க்கம் வேண்டினோம்
நகரம் கூட இல்லை
நரகம் வாய்த்தது.
கனிமரம் கேட்டோம்
காய்மரங்கூட இல்லை
முள்மரம் முளைத்தது.
நண்பனைக் கேட்டோம்
எதிரிகூட இல்லை;
துரோகி வாய்த்தான்
சலுகைகள் கேட்டோம்
உரிமைகூட இல்லை
கட்டளை இட்டார்கள்
தேவதை கேட்டோம்
மனுசியும் இல்லை
பிசாசு கிடைத்தது.
முதல்தரமனிதனை எதிர்பார்த்தோம்
சுமார்கூட இல்லை
கடைத்தரம் வாய்த்தான்.