இறைவன் தெரிகிறான்

கோடி கோடியாய்
விளக்குகள்...
உலகெங்கிலும்
இரவுப் பொழுதின்
இருள் கிழிக்க...
அங்கங்கே
சில பல மீட்டர்
தொலைவுகளுக்கு...

ஒற்றைச் சூரியனின்
உதயத்தில்
முகம் காட்டும்
பூமி முழுவதும்
விண்வெளியெங்கிலும்
இருள் நீங்கியது
கோடிக்கணக்கில்
கிலோ மீட்டர்களில்...

சூரியக் கதிர்களில்
தெரிகிறான் ஒருவன்...
புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்...

முகம் பார்க்க
மின்னொளி தேவையில்லா
வெளிச்சப் பொழுதினில்
அன்பு நண்பர்களுக்கு
இனியதோர்
காலை வணக்கம்...

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
🙏😀👍

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Jul-17, 8:35 am)
பார்வை : 254

மேலே