உன்னையேற்றுகிறாய் கண்வழி
காதல் சமிக்கை அனுப்பும் உன் கண்கள்
என்னுள் ஊடுருவ...
சமிக்கையால் நோயுற்று
என் நெஞ்சம் குதூகலிக்க...
தனிமை துறவை தூக்கியெறிந்து
உனதன்பையேற்க தயாரானேன்...
பொருட்படுத்தாத உலகத்து
அங்கங்களில் எனதார்வம் மேலோங்க...
எட்டாவது அதிசயமாய்
உணர்ந்தேன் இம்மாறுதல்களை...
மின்னோட்டம் குறைந்த அலைபேசியாய்
காலையில் நானிருக்க
இக்காலத்து இளவட்டமாய் தவறாமல்
அலைபேசியில் மின்னேற்றுவதுபோல்
என்னில் உன்னையேற்றுகிறாய் கண்வழி...