பார்வைகளில் தடுமாற்றம்

அரிசி கழுவிய நீரைப்போல
கலங்கி போயிருந்தது மனசு
கடந்து சென்ற அவள்
அறிந்தோ அறியாமலோ
இறுக்க அணிந்திருந்த டீசர்ட்
மறுப்பில்லா காரணமானது
முறுக்குகொண்டெழுந்த மோகத்தை
புறந்தள்ளிவிட்டு நடக்க ஆரம்பித்தேன்
பாதைகளில் கற்களும்
பார்வைகளில் தடுமாற்றமும்
சகஜமென்று எனக்கு
நானே சொல்லிக்கொண்டு!

எழுதியவர் : யாழினி வளன் (19-Jul-17, 11:29 pm)
பார்வை : 134

மேலே