தன்மயமானாள்
நான் தேர்வுகளெழுதி தோற்றவல்ல
தோல்வி பயத்தினால் தேர்வெழுதாதவன்.
ஆதலால் என் பயணங்களிலேயே வழித்துணை இல்லை!
என் விழிக்கலங்கிடின் கலங்குவோரில்லை
காதலிபோர் மனத்தில் கற்பனை மலரும் -எனக்கோ
காதலே கற்பனையாக மலர்தது!
கேள்மின் என்கதை சுவை மிகுந்திருக்கும்
என்னவள் நல்ல நிறத்தினளில்லை
ஏனைகவித்துவம் யாவுமில்லை.
நானோ நிலவேன கதிரேன பிதற்றிடும்
பழையவனில்லை!
பின் என்னடா கவிதை?என்போர்கிது பதில்
"அழுகுடையவர் தனை விரும்புவதில்லை
நாம் விரும்புவோர் அழுகுடையவர்"என்பது காதல்
மனத்தால் பேரழகுடையவள்,என்னவள்
கண்களசைவால் கவிதை வடிப்பாள்
கையோசையிலாது காதலிசைபாள்!
நான் தீட்ட எடுத்த வண்ணத் தூரிகை
என் கைபடாது எனைவரைத்திட்டாள்!
கற்பனையாக என்னுள் புகுந்தாள்
ஏனையோர் மாற்றாராகிட என்னுள்
என்னை முழுங்கி தன்மயமானாள்!!!