எல்லாம் இன்றே நடக்கட்டும்
இடைவேளை இல்லா நெருக்கங்கள் நடக்கட்டும்.
நீ இல்லா கனவுகள் கலையட்டும்.
என் காதல் ஆசைகள் எல்லாம்
என் மீசை சொல்லி முடிக்கட்டும்.
நீர் எல்லாம் உன் முகம் மறையட்டும்.
நான் தூங்க கனவுகள் ஓயட்டும்.
நான் தொலைத்த கவிதைகள் எல்லாம்
உன்னிடம் வந்து சேரட்டும்.
ஒரு நாளும் ஓயாமல்
எந்நாளும் மறவாமல்
மறு பார்வை பார்க்காமல்
என் உள்ளம் உன்னை காதல் செய்யட்டும்.
இவையாவும் இன்றே நடக்கட்டும்,
இன்றே நடக்கட்டும்.