அதே இடம்

அதே இடம்
**************

ரெண்டு பேர் டூர் போகணும்னு
பிளான் பண்ணுறாங்க...

அவங்க இருக்கிற இடத்துல
ஒரே வெயில் அடிக்குதாம்...
அதுனால ஒரு மலைப்பகுதியில்
ஒரு நாலு நாள் இருந்துட்டு வரலாம்னு...

பிளான் பண்ணுன மாதிரியே
சொன்ன நேரத்துக்கு ரெண்டு பேரும்
ஒன்னுகூடி...
தேவையான பொருட்களை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாங்க...

அதுல ஒருத்தன்
வளவளன்னு பேசிக்கிட்டே இருப்பான்...!
இன்னொருத்தன்
தேவைப்பட்டா மட்டும் பேசுவான்..!!

அவங்க இருக்குற இடத்துல இருந்து
அஞ்சு மணிநேரம் பயணம் பண்ணுனா
மலையடிவாரத்தை அடைஞ்சிடலாம்...

நேரம் ஆகிக்கிட்டே போகுது
மலையடிவாரமும் வந்துடிச்சி...
வண்டி மெல்ல மெல்ல
மலைமேல ஏற ஆரம்பிக்குது...

குறிப்பிட்ட ஒரு இடம் வந்ததும்
அதுல வளவளன்னு பேசுறவன் சொல்றான்..

“அடடா குளிர் காற்று
சும்மா சில்லுன்னு அடிக்குதுல”
என்று...

மலைப்பகுதின்னா அப்படித்தான் டா இருக்கும்...
இயற்கை தந்த வரம்னு

இன்னும் சிறுது நேர பயணத்தில்
மலை உச்சியை அடைந்த அவர்கள்
சொன்ன மாதிரியே அங்க தங்குராங்க...

இரண்டாவது நாள் முடியிற நேரத்துல
அவன் சொல்றான்

“மச்சான் இதுக்கு மேல இங்க இருந்தா ஜன்னி வந்து செத்துடுவேன்..
நாம நம்ம ஊருக்கு கிளம்புறது தான் நல்லதுன்னு...

சரி... உன் இஷ்டம்னு
ரெண்டு பேரும் கிளம்புறாங்க...

வண்டியும் இப்ப
மலையில் இருந்து மெல்ல இறங்கி வருது...
ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த அதே இடம்...
இப்ப அதே வாய் சொல்லுது..

“மலைய விட்டு இறங்க இறங்க
வெக்க காத்து அடிக்க ஆரம்பிச்சிடுச்சில...”
என்று

ஏன் டா.. ரெண்டு நாளைக்கு முன்னாடி
இதே இடம்,
இதே நேரம்,
இதே அளவு காற்றுதான் அடிச்சது...

அன்னைக்கு குளிர நோக்கி போகும் போது
இங்க குளிர் அடிக்க ஆரம்பிச்சது..
இன்னைக்கு வெயிலை நோக்கி போகும் போது
வெக்க அடிக்குதா..?

***********
உண்மையில் நாம் எதை நோக்கி போகின்றோமோ...

அதைப்பொருத்து தான் நம் மனதும் செயல்படும்..!!

இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (1-Aug-17, 6:24 pm)
சேர்த்தது : க முரளி
Tanglish : athey idam
பார்வை : 220

மேலே