ஆடி பெருக்கு கொண்டாட்டம்

ஆப்பநாட்டின் தலைநகரில்
ஆடிபெறுக்கு கொண்டாட்டம்
அன்பர்களே வாருங்கள்-என்
நண்பர்களே வாருங்கள்

அடிதடியே விட்டுபிட்டு
அன்பை மட்டும் ஏத்துகிட்டு
ஊரே கொண்டாடும்
உள்ளூர் திருவிழாங்க...

ஆறடி கம்பெடுத்து
ஆப்பனூரான் சிலம்பு சுத்த
ஆடி காத்தெல்லாம்
ஆவணிக்கு பறக்குமுங்க...

அழகான வீதிகளில்
அழகழகா பெண்கள் வர
ஆசை நாயகனாய்
அத்தை மகளே தேடுவோமுங்க...

கொட்டு சத்தத்துல
கொலவை சத்தம் சேர்ந்திசைக்க
கருநிற மேகமெல்லாம்
கருணை மழை பொழியுமுங்க...

பக்தி பரவசத்தோடு
பால்குடத்தை சுமந்து வந்து
பசும்பொன் சிங்கத்திற்க்கு
பாதபூஜை நடக்குமுங்க...

அன்பர்களே வாருங்கள்-என்
நண்பர்களே வாருங்கள்

தெய்வ திருமகனை
தேரினில் அலங்கரித்து
உல்லாச பவனியாய்
ஊரினில் வலம் வருவோம்.....

வாருங்கள்...வாருங்கள்...

எழுதியவர் : ந.இராஜ்குமார் (3-Aug-17, 1:20 am)
பார்வை : 525

மேலே