பாரத தாயே அழாதே

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

ஆற்றினில் மண் இல்லை
காட்டினில் மரம் இல்லை
வளரும் இந்தியாவில்
வளங்கள் எதுவுமில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

மருத்துவமனையில் மருத்துவரில்லை
மதுக்கடைக்கோ பஞ்சமில்லை
மயானங்கள் நிறைந்தாலும்
மக்கள் மீது அக்கரையில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

சாதி பெயரில் பள்ளிக்கூடம்
சமத்துவத்திற்க்கு இறப்பிடம்
வீதிதோறும் கலவரம்
விதியே மாற்ற யாருமில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

மதத்திற்கு மதம் கட்சி அமைத்து
மனிதநேயத்தை தோன்றி புதைத்து
மக்கள் மத்தியில் குண்டு வைத்து
மாண்டு போனவர் கொஞ்சமில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

ஊழல் செய்த பெருச்சாளிக்கு
உலகம் சுற்ற அனுமதி தந்து
உழவு செய்த விவசாயிக்கோ
உள்நாட்டில் உடமையில்லை...

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே...

பாலியல் கொடுமை செய்தனுக்கு
பாவ மன்னிப்பு கொடுத்துவிட்டு
பெண்கள் நாட்டின் கண்களென்று
பெருமை பேச்சுக்கு குறைவில்லை..

பாரத தாயே பாரத தாயே
பாவம் நீயும் அழாதே..!
பாதி இரவில் பெற்ற சுதந்திரம்
பாவி கைகளால் அழியாதே..!

பாதி இரவில் பெற்ற சுதந்திரம்
பாவி கைகளால் அழியாதே.....!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (15-Aug-17, 7:30 pm)
பார்வை : 1645

மேலே