👫உன்னோடு நான்🌷 ர ஸ்ரீராம் ரவிக்குமார்
நீரினுள்ளே.. கைவிட்டேன்
நிலவினை நான் தொட்டேன்
சிணுங்கிவிட்டதே சிறு அலைகளாக!
வானிலிருந்து நீர்க் குடித்தாயே!
அசதினிலே நீ படுத்தாயோ!
நான் தாலாட்டவே சிறு அலையில்
நீ உறங்கிவிட்டாயோ......
தென்னங்கீற்று
தாலாட்ட நிலவு ஒளி சிரிக்குதடி!
உன்னோடப் பார்வையில
என் வாழ்க்கை இனிக்குதடி!
உன்னோட நிழலாக நான் வரவா
என்னோடு நீ சேர்ந்தா பால் நிலவா!
வானம் கருக்கையில
வயல்வெளிகள் சிரிக்குதடி!
நீர் குடித்த நிலவு ஒன்னு
நான் குடிக்க நினைக்குதடி!
நான் தொட்ட நிலவு~ ஒன்னு
வெக்கத்துல சிணுங்குதடி!
ரா_ஸ்ரீராம்_ரவிக்குமார்