வண்ணத்துப்பூச்சி

வண்ணச்சிறகை விரித்து,
வாசல்வழி சென்று,
விருந்தோம்பல் ஏற்கும்
வண்ணத்துப்பூச்சியே!!
அனைவர் அழைப்புக்கும் செல்கிறாய்,
அமுதுதேன் உண்கிறாய்,
அன்பாக அரவணைக்கிறாய்,,
-
சூதுவாது தெரியாத பட்டாம்பூச்சியே!!
நடக்கும் நாடகம் புரியவில்லை உனக்கு,
நடப்பதை அறிந்தும் சொல்லதெரியவில்லை எனக்கு,
பூவும் உறவும் ஒன்று தான்,
காரியம் ஆகும்வரை உபசரிப்பு,
காரியம் வேண்டுமென்றால் தான் மறுஅழைப்பு…………………

எழுதியவர் : செ.நா (9-Sep-17, 9:41 pm)
பார்வை : 863

மேலே