சீதேவி மூதேவி
எனக்கு இரண்டு மனைவி
ஒருத்தியின் பெயர் சீதேவி
ஒருத்தியின் பெயர் மூதேவி
ஆனாலும் அந்த இருவரும்
என்னோடு சேர்ந்து இருந்து
குடும்பம் நடத்தியதில்லை
சீதேவி வரும்போது சிரிக்கிறேன் என்னைவிட்டு போகும்போது அழுகிறேன்
மூதேவி வரும்போது அழுகிறேன் என்னைவிட்டு போகும்போது சிரிக்கிறேன்
சில நாள் சிரிப்பதும்
சில நாள் அழுவதும்
பொழப்பாப் போச்சி
இப்படியே வாழ்க்கை
முடிஞ்சிப் போச்சி
இன்பமும் துன்பமும்
அவள்களின் ஆட்சி