துயர்

ஈழம் ஈழம் வென
ஏலமிட்டு,
ஈரக்கொலை தனை
வேரறுத்து ,
ஈரம் வற்றும்முன்
ஈட்டித்தனை ஏந்தி,
கூர்முனை வாள்
குறிவைக்கிறத தது!,
கார்பன் கார்ப னென
பேர்சூட்டி கோலமிட,
ஊரெல்லாம் ஒறங்காம
போர்சூடி ஓலமிட!
கங்கையும் காவேரியும்
கரையோடி கண்ணீர் விட,
கதிரும் மங்குகிறது
கதிரா மங்கலத்தில் !
நெல்லும் விளயல
நெடுந்துயர் ஓயல,
நெஞ்சுரம் நீங்கல
நெடுவாசல் விடியல!
இருப்போனை ஏமாத்திவிட்டு
இல்லாதவனுக்கு வெண்கல
சிலை வைக்கிறான்!
அழுதே புரண்டாலும்
அழுக்கு நீவீர் அங்கே
நில்லும் என்கிறான் !
அக்கம் பக்கம் ஒன்னும்
வேண்டாமென அங்கன்வாடிய
தூக்கிகிட்டு அம்மணமா
போக சொல்லுறான்!
கரம் கொடுக்கும்
கனவான் யாருமில்ல,
கழனிய விட்டா
வேறு வேல இல்ல !
கத்தி கத்தி காரியம்
ஈட்ட ஒரு கூட்டம்
குத்தி குத்தி குறை
கூற ஒரு கூட்டம்
குறையொன்றும் தீரவில்ல!
காது கொடுக்க
நாதி யில்ல
கரை சேர்க்க
நீதியில்ல!
நக்கி பிழைப்போர்
நாடாண்டா நாளும்
துயர் போகப்போவதில்லை !
துயருடன்!

எழுதியவர் : ச. சோலைராஜ் (1-Oct-17, 5:37 pm)
பார்வை : 761

மேலே