தமிழினமே ஆள வா

தமிழா வா... தமிழா
உன் தனித்துவத்தை தீர்மானித்து வா...
உன் தலைநிமிர்வை தீர்மானிக்கவே வா...
தடைகளை தகர்தெரிய வா...
தர்மம் வென்றிடும் நீ வா...
தன்நலம் மறந்தாயே வா..
திசையெட்டும் கிட்டும் நீ வா..
தாய் மண்ணை காத்திடு வா...
தயங்காதே தனித்தேனும் நீ வா...
நம்பிக்கை உண்டு உன்னிடம்
நல்ல கொள்கைகளும் உண்டு உன்னிடம்
நம்பிவந்தோரை நாடாளவும் விடுவாய்
நம்பிக்கை துரோகம் செய்தால் நாடுகடத்தியும் விடுவாய்.
தமிழா வா... தமிழா.

தமிழா வா... தமிழா
உன் உயர்வு அதை உலகுக்கு உணர்த்திடவே வா...
உன் பெருமைகளை பேணிக்காத்திட வா...
கடமைகள் பல உண்டு வா..
கண்ணியம் தவறாமலே நீ வா..
கீழடி பெருமையை பெயர்த்தெடுக்க வா..
காயங்கள் பல கண்டோம் நீ வா..
காணாமல் போன நம் பாரம்பரியம் அதை
காப்பற்றி காத்திடல் வேண்டும் நீ வா...
உன் வீரம் அது குறையவும் இல்லை
நீ வீழ்வது இன்னமும் ஓய்ந்திடவும் இல்லை
நம்பிக்கை துரோகம் உன்னை வீழ்த்திய ஆயுதம்
துரோகிகளே இன்றும் உன் தோழமையில்,விழித்துக்கொள்.
தமிழா வா... தமிழா.

தமிழா வா.. தமிழா
உன் அறியாமையை அழித்தொழித்து வா...
உன் அறிவாற்றலாலே அகிலம் ஆள வா...
அரசியலில் அதீத மாற்றம் வேண்டும் வா..
அதிகாரம் அது தமிழுக்கே நீ வா..
அகிம்சையும் வேண்டும் வா...
அடக்கமுறைக்கெதிரான ஆயுதம் கொண்டு நீ வா...
ஆட்சியும்,அதிகாரமும் நாமே வா...
ஆளப்போவது தமிழினமே நீ வா...
தமிழினமே தலைநிமிரனுமே,
தமிழ் என்று சொன்னாலும்,தமிழன் என்று சொன்னாலும்
திசையெட்டும் நம் கையில்கிட்டுமே.
தமிழ் தேசிய உணர்வோடும்,உயிர் தமிழ் உயர்வோடும்
உலகில் தமிழ் வாழ்ந்திட,நாளை உலகை தமிழ் ஆள,தமிழினம் ஆள
தமிழா வா...
தமிழ் வாழ்ந்திட நீ வா...
தமிழினமே உயர்ந்திட உழைப்போம் நீ வா...

எழுதியவர் : கு.கார்த்திக் (3-Oct-17, 2:04 pm)
பார்வை : 332

மேலே