தென்படாத தென்றலே

தென்படாத தென்றலே!
உன்னைத் தேடி தேரோட்டும்
என் பூவிதழ்!

வசந்தத்தில்லாவது வாசல்
வருவாயா! - என்
வாசம் தெறிக்க!

வாடகை நிலவில்லேறி வலம்
வருவாயா! வான்னோக்கி
என்னிதழ் விரிக்க!

மஞ்சத்தில் மலர்ந்த மங்கை
வருவாளோ!- என்
சுவாசம் பறிக்க!

என் சுவாசம் நீயென்று உணரா
மங்கைக் கூந்தலில்
நான் மணப்பதா!

மரணிக்கிறேன்!...

தென்றலாக நீயும் வர
பூவாக காத்திருப்பேன்!... உயிருள்ளவரை!....

எழுதியவர் : நாசா (9-Oct-17, 7:34 am)
பார்வை : 95

மேலே