யாரால் யார்

ஆண்டவர்களின்
அகங்காரப் போரில்
அடித்துச்சாக..
ஆண்டவர்களால்
ஆக்கப்பட்ட
அப்பாவி சிப்பாய்களா
மனிதர்கள்....?

அல்லது....

மக்களால்
மக்களின்
மனமாச்சர்யத்தினால்
மக்களாலேயே
தோற்றுவிக்கப்பட்டவர்களா
இந்த
மகேசன்மார்கள்.....?

எது எப்படியோ...

இதுவரை இந்த
இறைவர்கள்
தங்களுக்குள்
சமாதான உடன்படிக்கை
செய்து கொண்டதற்கான
எந்த தடயமும்
புலப்படவில்லை....!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (9-Oct-17, 8:50 am)
பார்வை : 101

மேலே