அப்பாவின் நேசம்
அப்பாவின் சுவாசமெல்லாம்
வேர்வை தந்த வாசமடா
நாம் வாழும் வாழ்க்கையெல்லாம்
தகப்பன் தந்த நேசமடா
தந்தையவன் மரணமது
கடவுள் செய்த மோசம்டா
அவர் மண்ணோடு மறைந்தாலும்
நிலைக்கும் அவர் பாசமடா
என் பசிதீர்க்கத் தீயில் வெந்த
சாதமப்பா நீ
நான் தூங்கப் பாடல் தந்த
ராகமப்பா நீ
வயல்காட்டில் பாடுபட்ட
ஜீவனப்பா நீ
புயல்காற்றில் அணையாத
தீபமப்பா நீ
வானவில் போல வந்தாயே
வாழ்வில் வண்ணங்கள் தந்தாயே
நன்றி என்னும் ஒரு வார்த்தை
நான் சொல்லும் முன்னே சென்றாயே
துன்பம் உனதாய்க் கொண்டாயே
இன்பம் மட்டும் கொடுத்தாயே - எங்களை
இதயக்கருவில் சுமந்தாயே
தந்தையல்ல நீ எம்தாயே