நியதி
செவிகள் கேட்கும் ஓசை ஒன்று
கண்கள் பார்க்கும் கோணம் ஒன்று
உயிரில் ஓடும் ரத்தம் ஒன்று
இறக்கும் வரை பிறப்பு ஒன்று
இறந்த பின் மயானம் ஒன்று
இதற்கு நடுவில்
மனமும் ஒன்று தான்
அருவத்தில் இருந்து உருவத்தை காட்டுவதும் உருவத்தில் இருந்து ஆசைகளை பிரசுவிப்பதும் இதற்கு மட்டுமே உண்டான விதி...