காதல்

'அன்பே, நம் காதலை ஒரு
குறுங் கவிதையில் அடக்கிவிட
கவிஞர் உம்மால் முடியுமா என்றோர்
சவால் விட்டாள்..............
சவாலுக்கு நான் தந்த
கவிதை இதோ, இதோ
" நீயில்லா நான் இல்லை
நான் இல்லா நீயும் இல்லை
என்னுள் நீ ,உன்னுள் நான்
இதுவே நம் காதலின் சாரம் "
இது போதுமா இன்னும்
எழுத வேண்டுமா சொல்வாய்
என் இனியவளே என்றேன்
'நீ எழுதிய நாலடிகள் என்
மனதில் பொன்னடிகளாய்
பதிந்துவிட்டன 'என் மனது
உன்னை நினைத்து மெத்த
பெருமையும் கொண்டது என்றாள்
புண்ணியம் செய்தவன் ஆனேன் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Oct-17, 5:42 pm)
Tanglish : kaadhal
பார்வை : 104

மேலே