இருக்கவும் முடியவில்லை

உன் நினைவுகள்
எனக்குள் ஓர் அலை போல
அழகாய் எட்டிப் பார்க்க
அளவாய் கால் நனைத்து
சுகம் கண்டேன் முதலில் ...

மெல்ல மெல்ல
எழும்பி வந்த
உன் நினைவலைகள்
எதிர்பாராத வேளையில்
ஒரு நாளில் என்னை
இழுத்துச் சென்றது
எங்கோ ஆழமாய் ...


அன்று உனக்குள்
சென்றவள் தான்
உனக்குள்ளிருந்து
இன்னும் வெளியே
வர முடியாமல் நான் ....


அந்த அன்று
என்று என்பது
எனக்குள் இன்னும்
புரியாத ஒரு
சுகமான புதிர் தான்

உன் அலைகள்
எனக்குள் ஒரு
சுனாமியாய் மாறி
சுருட்டிவாரி
எடுத்துக் கொள்கிறது
எப்போதும் என்னை
உனக்குள்

ஆலைக்குள் சிக்கிய
என் சின்ன மனசு
வலைக்குள் மாட்டிய
ஒரு சின்ன சிட்டுக்குருவியாய்
இப்போது .....


உன் நினைவுகளின் வட்டத்துக்குள்
மட்டும் உழலும் என்னால்
இயல்பாய் இருக்கவும் முடியவில்லை
இயலாமல் இறக்கவும் முடியவில்லை

இருக்கவும் முடியவில்லை
இறக்கவும் முடியவில்லை
!!!

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (15-Oct-17, 4:54 am)
பார்வை : 2800

மேலே