சாரலில் நீயடி

கார்மேகக் கண்ணீர் நின் கருங்கூந்தல் தொட்டதடி!

உன் கூந்தல் தொட்ட மழைத்துளி புவி ஈர்ப்பை எதிர்த்ததடி!

வரம் பெற்ற ஓர் துளி உன் மனம் உரசி திளைத்ததடி!

கூடா ஆசையில் ஓர் துளி உன் இதழ் சுவைக்க வந்ததடி!

உன் இடை தொட்ட இன்பத்தில் சில துளி
ஆர்ப்பரித்து அலைந்ததடி!

அம்மேனி தொடா பாவத்துளி உன் பாதம் தொட்டு அமிர்தம் என்றானதடி!

நான் ரசித்த மழையோவியம் நீயடி!!
-பிரவின்

எழுதியவர் : பிரவின் கோ (15-Oct-17, 9:16 pm)
Tanglish : saaralil neeyadi
பார்வை : 205

மேலே