கவிஞர் இரா இரவி கவிஞர் இரா இரவி

கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி !

அறிந்தனர் குச்சியால்
மேடு பள்ளம்
பார்வையற்றோர் !

இனிக்கவில்லை ஏழைக்கு
தீபாவளி
நினைவில் கந்துவட்டி !

வங்கியின் குறைந்தபட்ச
இருப்பை எடுத்து
ஏழையின் தீபாவளி !

வைத்துக் கொள்ள ஆசை
வைக்க இடமில்லை
படித்த நூல்கள் !

வேண்டாம் நமக்கு
மழையை விரட்டும்
மழலைப்பாட்டு !

வயிற்றில் நெருப்பு
சிவகாசிக்காரர்களுக்கு
சீனப்பட்டாசு !

மந்தமானது
பட்டாசு வியாபாரம்
புதிய வரிகள் !
.
கீழே விழுந்தும்
கவலையின்றி நடந்தது
நதியாக அருவி !

புறாக்களின் இரை
பசியாறியது
மாடு !

மனமில்லை அழிக்க
இறந்திட்ட நண்பரின்
அலைபேசி எண் !

திரையரங்குக் கட்டணம்
உயர உயர
பெருகும் குறுந்தகடு !

துருப்பிடித்தது
அறுவடை
அரிவாள் !

நடக்கின்றது
வேண்டா வெறுப்பாக
விவசாயம் !

பேரம் பேசுவதில்லை
பெரிய கடைகளில்
சாலையோரம் பேரம் !

நீண்ட நேரமாகும்
பெரிய உணவகங்களில்
உணவு வர !

பார்த்துவிட்டு அகன்றனர்
காசு போடாமல்
கயிற்றில் நடப்பதை !

ஆணை வரவென்பதும்
பெண்ணை செலவென்பதும்
அபத்தம் !


--

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (18-Oct-17, 4:28 pm)
பார்வை : 186

மேலே