டாக்ஸி டிரைவர்

இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள எரி சார்ந்த ஊர் மட்டக்களப்பு. பாடு மீன் வாவி என்பர். தவளைகள் மாரி காலத்தில் தாளவாத்தியக் கச்சேரி இசைப்பது போல் கல்லடி பலத்தின் கீழ் ஊரிகள் பூரண சந்திரன் காலத்தில் இசை பாடும். சிலர் அவ்விசை கடல் கன்னிகள் காதலர்களை அழைக்கப் பாடும் இசை என்பர். அவ்வூருக்கு பெயர் தொன்றியது பற்றி மட்டகளப்பு மான்மியம் என்ற நூலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளாளர். முக்குவர் கிழக்கு ’’ இலங்கை மேல் படை எடுத்த போது ஒரு சதுப்பு ஏரி காணப்பட்டது. அதில் தமது ஓடத்தை செலுத்தி சென்றபோது ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேல் தோணியில் போகமுடியாமல் சேறு இருந்ததால் இது “மட்டும் தானடா” என்றனராம். இதனால் இப் பெயர் உருவாகியது. சிங்களத்தில் “மட” என்றால் சேற்றைக் குறிக்கும்.. “களப்பு” என்றால் வாவியைக் குறிக்கும் மட,, களப்பு ஆகிய இரு சிங்கள சொற்கள் சேர்ந்து மட்டக்களப்பு என்ற பெயர் வந்திருகிறது என்கிறார்கள் சிங்களவர்கள். ஒரு காலத்தில் மட்டகளப்பு கண்டி சிங்கள மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. எது எப்படி இருப்பினும் சேர நாடான கேரளாவுடன் பலகாலமாக தொடர்பு இருந்த படியால் கண்ணகி அம்மன் வழிபாடு மட்டக்களப்பு பகுதியில் பிரசித்தமானது. அத்தகைய ஊரில் பிறந்தவன் வரதன்.

மட்டக்களப்பு நகருக்கு அருகே உள்ள கோராவெளி கண்ணகி அம்மன் கோவிலுக்குச் சுற்றுப்புறக் கிராமங்களில் வாழும் மக்கள் சென்று வழிபடுவது உண்டு. கிழமைக்கு ஒரு தடவையாவது. அக் கோவிலுக்கு போகும் தீவிர பக்தன் வரதன் எப்போதும் உண்மை பேசுபவன். நேர்மைக்கு அவன் ஒரு எடுத்துக்காட்டு. அவன் பிறந்த ஊர் மட்டக்களப்பு.

மூன்று வருடங்களுக்கு முன் காலம் சென்ற அவனின் தகப்பன் நடேசன், ஏராவூரைச் சேர்ந்தவர். அவர் ஒரு மோட்டார மெக்கானிக். சொந்தத்துக்குள் சியாமளாவைத் திருமணம் செயது கொண்டார். சியாமளா மட்டக்களப்பு ஆஸ்பத்திரயில் நேர்சாக வேலை செய்து வந்தாள். நடேசனுக்கும் சியாமளாவுக்கும் பிறந்தவர்கள் வரதனும் அவன் சகோதரி தேவியும். இரண்டு வருட வயது வித்தியாசம்.

நடேசன் தன் மோட்டார் மெக்கானிக கடையை ஏராவூரில் இருந்து மட்டக்களப்புக்கு மாற்றினான். ஒரு நாள்,கடையில் மோட்டார் ஒன்றை திருத்தும் போது போது மின்சாரம் தாக்கி நடேசன் எதிர்பாராத விதமாக உயிர் இழந்தான். தாயையும் தங்கச்சியையும் கவணிக்க வெண்டிய பொறுப்பு வரதன் தலையில் விழுந்தது. பத்தாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர வரதனுக்கு ஆர்வம் இருக்கவில்லை. கார் ஓட்டப் பழகி, ஆரம்பத்தில் டாக்டர் ஒருவர் வீட்டில் அவரின் கார் சாரதியாக சில் காலம் வேலை செய்து, அதன் பின் உயர்ந்த சம்பளத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு பிரபல்யமான ஏற்றுமதி இறக்குமதியும், வைர வியாபாரியுமான ஹனிப்பா ஹாஜியர் முதலாளி இடம் டிரைவராக வேலைசெய்யத் தொடங்கினான். ஹனிப்பா ஹாஜியர் முதலாளி காஜூ, பாய். இறால். அரிசி வியாபாரத்தோடு இரத்தினகல் வியாபாரமும் செய்பவர்.. காலப்போக்கில் ஹனிப்பா முதலாளியின் நம்பிக்கைக்கு வரதன் பாத்திரமானான்..
.
பல சமயங்களில் மட்டக்களப்புவில் இருந்து கொழும்பு. இரத்தினபுரி.’ பேருவலைக்கும் ஹனிபா முதலாளியை இரத்தினகல் வியாபார விசயமாக காரில் கூட்டிச்செல்வது அவன் பொறுப்பு. வங்கியில் பணத்தைப் போடுவது, எடுத்து வருவது போன்ற வேலைகள் செய்வது வரதன் சேய்தான்; வரதன் முதலாளியின் டிரைவர் மட்டுமல்ல செக்யூரிட்டி கார்ட் கூட. கராத்தி கற்ற அவனுக்கு அது உதவியது.

பல அரேபியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இரத்தினகல் வியாபார செய்ய ஹனிபா ஹாஜியாரிடம் அடிக்கடி வந்து போவார்கள். அவர்களை பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் போய் சந்தித்து, பாதுகாப்பாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது வரதன் பொறுப்பு. அவர்கள் வந்த வேலை முடிந்ததும் திரும்பவும் அவர்களை ஹோட்டலில் இருந்து கூட்டிச்சென்று விமானம் ஏற்றுவதும் அவனே.
.
ஒருசமயம் துபாயில் இருந்து இரத்தினகல் வியாபார விசயமாக ஹனிபா ஹாஜியரிடம் வந்த பிரபல்ய வைரவியாபாரி சஹீத் முகமதுவை கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சந்தித்து, மட்டக்களப்புவுக்கு அழைத்து வந்து. சில தினங்களுக்குப்பின் திரும்பவும் விமான நிலையத்துக்கு கூடிச்சென்று விமானம் ஏற்றும் பொறுப்பை வரதனிடம் ஹனிபா முதலாளி கொடுதிருந்தார். சஹீத் முகமதுவை பல சுற்றுலா இடங்களுக்கும், இரத்தினபுரி, கொழும்பு பேருவல ஆகிய இடங்களுக்கும் கூட்டிச் சென்று, காட்டி. அவரைவிமானத்தில் ஏற்றியபின், வரதன் மட்டக்களப்புவுக்கு திரும்பும் வழியில் காருக்கு பொலநறுவையில் பெட்ரோல் அடிக்க வேண்டி இருந்தது. பெட்ரோல் அடித்து திருப்பும் போது பின் சீட்டில் ஒரு சிறு பை இருப்பதை வரதன் கண்டான். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அது சஹீத் முதலாளியின் பையாக இருக்குமோ என அவனால் ஊகிக்க முடிந்தது. சஹீத் முதலாளியின் மறதி குணத்தை அவரோடு பழகிய ஒரு கிழமைக்குள் வரதன் அறிந்து விட்டான். பையுக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்த அவன், அதிர்ச்சி அடைந்தான். பை நறைய அமெரிக்கன் நூறு டாலர் நோட்டுகள். ஹனிபா முதலாளியோடு செய்த வியாபாரத்தில் சஹீத் முகம்மதுக்’கு கிடைத்த பணம் அது என்பதை ஊகிக்க வரதனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. பணத்தை எண்ணிப் பார்க்க அவன் விரும்பவில்லை; நூறு டொலர் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்தது, அந்தப் பெரிய தொகை பணத்தை அவன் ஒருபோதும் கண்டதில்லை. அது அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

வரதன் நேர்மையனவன். அந்தப் பணத்தோடு அவன் மட்டக்கள்ப்புக்குத் திரும்பாமல் வேறு எங்கேயாவது சென்றிருக்கலாம்;. தனக்கென அவன் விரும்பியபடி கார் வங்கி டாக்ஸி டிரைவராக கொழும்பில் சுற்றிலாப் பயணிகளுக்கு கார் ஒட்டி பெரும் பணம் சம்பாதித்திருக்கலாம். அனால் அவன் மனம் அப்படி செய்யத் துணியவில்லை. பணத்தோடு நேரே ஹனிபா முதலாளியிடம் வரதன் போனான்.

“ என்ன வரதா சஹீத் முதலாளியை பத்திரமாக கூட்டிப் போய் விமானத்தில் ஏற்றி விட்டாயா”? ஹனிப்பா ஹாஜியார் கேட்டார். .

“ ஓம் ஹாஜியார் விமானம் ஒரு மணி லேட்.” . “

“ அப்படியா?. சஹீத் முதலாளிக்கு உன்னை மிகவும் பிடித்துக்கொண்டது. உனது நேர்மையான குணத்தை அவர் வெகுவாக பாராட்டி எனக்குச் சொன்னார். அவருக்குத் துபாயில் இருபது டாக்ஸிகள் இருக்காம். தனது துபாய் “சபாரி” டாக்ஸி கொம்பனியை நடத்த உனக்கு விருப்பம் இருக்குமா என்று என்னிடம் கேட்டார். நல்ல சம்பளமும், சலுகைகளும், தங்க வீடும் தருவாராம். அந்த பணத்தில் உன் தங்கச்சிக்கு’ நீ நல்ல இடத்தில் கல்யாணம்.செய்து வைக்கலாம். உனது வீட்டுக் கடனைத் தீர்க்கலாம்” என்றார் ஹாஜியார்.

“ நீங்கள் என்ன பதில் ஹாஜியார் அவருக்கு சொன்னனீங்கள்” வரதன் கேட்டான்.

“ நான் அவருக்குச் சொன்னேன் , உனக்கு, நீ சம்பாதித்து உன் செலவில் நல்ல பென்ஸ் கார் வங்கி கொழும்பில் வெளிநாட்டு பயணிகளுக்கு டாக்ஸி ஓட விருப்பம் இருப்பதாக. அதோடு உன் தாயும் தங்கச்சியும் இங்கை இருப்பதால் இலங்கையை விட்டு நீ துபாய் வர சம்மதிப்பியோ தெரியாது என்று”, என்றார் முதலாளி.

“ நல்ல பதில் சொன்னீர்கள் ஹாஜியார். எனக்கும் அவரை பிடித்துக் கொண்டது. அவர் பெருமை இல்லாதவர் ஆனால் சரியான மறதிக்காரர்”.

“ அது சரி, அது என்ன உன் கையில் ஓர் பை’” ஹனிப்பா முதலாளி கேட்டார்.

“ இது பற்றி தான் உங்களிடம் ஒரு முக்கியமான விசயம் சொல்ல வந்தனான் இந்தப் பையை சஹீத் முதலாளி மறந்து போய் காரில் வீட்டு விட்டுப் போய் விட்டார்”. வருகிற வழியிலை பொலநறுவையில் பெட்ரோல் அடித்து போட்டு காரிலை ஏறும் போது பையைக் கண்டனான். முக்கிய பத்திரங்கள் எதாவது இருக்குமோ என்று நான் திறந்து பார்த்த போது’ எல்லாம் நூறு அமெரிக்கன் டாலர் நோட்டுகள் இருக்குது. எண்ணிப் பார்த்தால போது பல்லாயிரம் டொலர்கள் மட்டில் இருக்ககலாம் என நினைக்கிறேன். நான் பணத்தை எண்ண விரும்பவில்லை. இதை உங்களிடம் கொடுக்கவே பத்திரமாக கொண்டு வந்தனான்.” பதட்டத்தோடு வரதன் சொன்னான்.

முதலாளி பையை வாங்கித் திறந்து பார்த்து, “ என்ன அவ்ளவும் அமெரிக்கன் டாலர்கள்களா?.என்னால் நம்பமுடியாவில்லையே. இது அவர் இலங்கையில் செய்த வைர வியாபாரத்தின் மூலம் அவருக்கு கிடைத்த பணம். அவர் சரியான மறதிக்காரர்”.
“ஹாஜியார் இந்தப் பணத்தை அவருக்கு தாமதிக்காமல் அனுப்பிப் போடுங்கோ. நடந்ததை அவருக்குச் சொலுங்கோ”

“ வரதா என்னால் உனது நேர்மையான குணத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. நீ நினைத்து இருந்தால் இந்த பணத்தோடு மட்டக்களபுவுக்கு வராமல் எங்கையோ போய் இருக்காலாம். நீ அப்படி செய்யாதது எனக்கு உன்மேல் பெரும் மதிப்பை’ கொடுத்து இருக்கு. நான் உடனே போன் செய்து அவருக்கு சொல்லுறன். பணத்தை அவருக்கு அனுப்ப ஒழுங்குகள் செய்கிறேன்” ஹனிப்பா முதலாளி வரதனின் கைகளைப் பிடித்து கொஞ்சிச் சொன்னார்.

******

அடுத்த நாள் முதலாளி வந்து சொன்னதை வரதனால் நம்பமுடியவில்லை
“வரதா நான் சஹீத் முதலளியிடம் நடந்ததைச் சொன்னேன். அவர் நான் சொனதை கேட்டு விட்டு சிரித்தார்”
“ஏன் அவர் சிரித்தார் முதலாளி?
“ அவர் சொன்னார் உன் நேர்மையை பரிசோதிக்கவே பணத்தோடு பையை விட்டு சென்றதாக. நீ அவரின் பரிசோதனையில் சித்தியடைந்து விட்டதாவும்.. அதில் உள்ள பணத்தில் உனக்கு’ விரும்பியபடி நீ டாக்ஸி ஓட்ட புது கார் ஓன்று வாங்கிக் கொடுக்கும் படியும். அடுத்த தடவை தான் இலங்கைக்கு வரும் போது தான் உன் சொந்த டாக்ஸியில் பயணம் செய்ய விரும்புவதாகச் சொன்னார். அது மட்டுமல்ல தனக்குத் தெரிந்த அரேபிய பிஸ்னெஸ் முதலாளிமார்க்ள் இலங்கை வரும்போது உன் டாக்ஸியைப் பாவிக்கும் படி தான் சொல்வதாகச் சொன்னார்.”.

வரதனுக்கு என்ன பதில் சொல்வதேன்றே தெரியவில்லை. அரேபியர்களில் இவ்வளவு நல்ல குணம் உள்ளவர்களும்’ இருக்குறார்களே என நிணைத்த போது வரதன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிரம்பியது.

******




டாக்சி ஸ்டாண்டில முன் நிறுத்தப்பட்டுள்ள் ஏழு டாக்ஸிகளில் வரதனின்ன டாக்ஸியும் ஒன்று. தன உழைப்பில சேமித்து சில மாதங்களுக்கு முன் வாங்கிய சிவப்பு நிற குளிரூட்டியய டாக்ஸி அது. லட்சுமி என்று அதற்கு பெயர் வைத்து ஓட்டி வந்தான். தினமும்; வேலை முடிந்ததும் டாக்ஸியை தன்ன கைப்பட ககழுவி சுத்தப்படுத்துவதை பழக்கமாகக் கொண்டான். காலையில் டாக்ஸிக்கு சாம்பிராணி புகைகாட்டி ஊதுபத்தி கோளுத்தி டாக்ஸிக்குள் இருக்கும் முருகன் படத்தை வணங்கியே தன் தொழிலை ஆரம்பிப்பான். டாக்ஸி வாங்க தான் டிரைவராக வேலை பாரத்த காதர் முதலாளியிடம் வட்டி இல்லாமல் பெற்ற கடன்ன தொகையை மாதம் மாதம் தவணை முறையில கட்டி வந்தான். கடனில எழுபது விகிதத்தை கட்டி முடித்துவிட்டான்.
ஹனிபா மரைக்காரிடம் டாக்ஸி டிரைவராக வேலைக்கு அமர்ந்தான். அவனது நேர்மையான உழைப்பைக் கண்டு அவனுக்கு சொந்தத்தில் டாக்ஸி வாஙக வட்டியில்லாமல் கடனாக பணம் கொடுத்தார் ஹனிபா மரைக்காயர். ஆநதப் பனத்தில் 2016; ஆணடின் சிவப்பு நிற டொயோட்டா ப்ரியஸ் மொடல் காரை 5.5 மில்லியன் ருபாய் கொடுதது வரதன் வாங்கி லஷ்மி என்று நாமம் சூட்டி பாவித்தான். சிவப்பு நிற கார் என்பதால் அதன் விலை மற்றைய நிறக் கார்களை விட 0.6 மில்லியன் அதிகம்
கார் வாங்கிய பணத்தில் ஒரு தொகையை தானும் தாய் சியாமளாவும் சேமித்த பணத்தில் இருந்து கட்டினான். மிகுதி பணம் காதர் மரைக்காயர் கொடுத்த பணம். தவராது டாக்ஸியை ஓடிய தூரத்துக்கு ஏற்ப சேவிஸ செயது கொள்வான். அவன் வெளிநாட்டு சுறறுலாப் பயணிகளை ஏற்றி செல்வதால். ஆங்கிலம் , சரளமாக பேசக் கூடியவன். அவன் ஆங்கில உச்சரிப்பு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உச்சரிப்புப் போல் இருந்தது, சரளமாக பேசும் மூன்று மொழிகளோடு அரேபிய மொழியும் ஓரளவுக்கு வரதன் பேசுவான். ஆதனால் அவனிடம் சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு கொண்டு வரும் சுற்றுலா குழுக்கள் அவனை விரும்பிப் பயணிகளை அவனது டாக்ஸியில் கூட்டிச் சென்று இலங்கையில் முக்கிய சுற்றுலா இடங்களைக் காட்ட அமர்த்துவார்கள். அதனால் அவனுக்கு சவாரிக்கு குறைவு இல்லை.
சில வருடங்களில் இன்னொரு டாக்ஸியக்கு உரிமையாளன்.

******

எழுதியவர் : பொன் குலேன்திரன் கனடா (21-Oct-17, 1:48 am)
பார்வை : 281

மேலே