உன்னை தவிர
எனைவிட்டுச் சென்ற
எதுவும் என்னதில்லை.
உன்னை தவிர....
ஊருக்கு பதில் சொல்ல
யோசித்து எனக்கு
கேள்வியை வைத்தாய்....
உன் மனதில்
நானில்லையென்றா
எனைத் தூக்கியேறிந்தாய்??...
ஊரெல்லாம்
அடங்கியபின்னும்
அடங்கவில்லையடி
உன் நினைவுகள்....
உன்னோடு பேசிய
வார்த்தைகளும்.
சுற்றிய தளங்களும்
இன்னும் பசுமையாய்
இருக்குதடி மனதில்...
மாலைநேர மல்லிகையே
மண்டியிட்டு புலம்பும்
மனமுனக்கு புரியவில்லையா??
வேதனையில் வேகிறேன்.
சாதனை செய்கிறது நினைவுகள்...
உறக்கம் விடுத்து...