சந்தேகமாய் இருக்கிறது

இது இரவு வணக்கமா
காலை வணக்கமா
கொஞ்சம் சந்தேகமாய் இருக்கிறது....

அதனால்
வணக்கம் மட்டும் போதும்... இப்போது
வணக்கம் சொல்ல
வேண்டுமா...

நன்றி சொல்ல வேண்டுமா...
சந்தேகமாய் இருக்கிறது....
நன்றி சொல்லி
உறங்க போகிறேனா...

வணக்கம் சொல்லி எழ போகிறேனான்னு கொஞ்சம்
சந்தேகமாய் இருக்கிறது...

கடிகாரம் மட்டும்
மணிக்கொருமுறை
என்னை உறங்கச் சொல்கிறது...

நேரம் கடக்கிறது
விடியலும் வர
காத்திருக்கிறது....
உறக்கமின்னும் காணலையே...

இரவைத் தாண்டி
வந்தேன்...
விடியல் என் வாசல்
வாசல் வருமா....

இன்னும் சந்தேகமாய் இருக்கிறது..

எழுதியவர் : சு. கருப்பசாமி (23-Oct-17, 9:29 am)
பார்வை : 162

மேலே