தனி ஒருவன்

வேண்டுதல் பிரார்த்தனை
பணங்காசு நகைநட்டு
சகலத்தையும் நேரில் சமர்ப்பிக்கவென
லட்சக்கணக்கில் மோதிக்கொண்டிருந்தது
பக்தர் கூட்டம் தினம் தினம்
சக்திவாய்ந்த அந்த தெய்வமோ
வழிமேல் விழிவைத்துக்
காலமெலாம் காத்திருந்தது
எந்த பாரத்தையும் தன்மீது போடாமல்
எதையும் கேட்காமல் வேண்டாமல்
தன்னை ஒருமுறை
பார்த்துவிட்டாலே போதும் என்கிற
ஆசையை மட்டும் சுமந்துவரும்
அந்த ஒருவனை எதிர்பார்த்து

எழுதியவர் : (24-Oct-17, 3:44 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : thani oruvan
பார்வை : 1187

மேலே