ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அழிந்தன பதிந்தவை
பதிகிறேன் குரலைவைத்து
அலைபேசி !

வேண்டும்
சில மணி நேரம்
பால் தயிராக !

முட்கள் பற்றிய
கவலையின்றிப் பயணம்
தேனீக்கள் !

தந்தது இசை
துளைகளிட்டப்பின்னும்
புல்லாங்குழல் !

கேள்விக்குறியானது
வாழ்வாதாரம்
ஏழைகளுக்கு !

மீன்களை பிடிக்கும் முன்
மீனவரைப் பிடிக்கிறான்
சிங்களன் !

தாமரைஇலை தண்ணீர்
தலைவன் தொண்டன்
இன்றைய அரசியல் !

அனைத்துக் கட்சி
வேட்டிகளும் உண்டு
அரசியல்வாதியிடம் !

நிவாரண நிதியிலும்
வாரி விடுகின்றனர்
அரசியல்வாதிகள் !

ஒருவழிப்பாதை
ஏறும் இறங்காது
விலைவாசி !

பாதையில் நடந்தால்
மாதவரி வசூலிப்பு
விடுதலைக்குப்பின் இந்தியா !

பறித்தனர் எழுத்துரிமை
பறிக்கின்றனர் பேச்சுரிமை
பெயரோ மக்களாட்சி !

நீ யாரடா
என் உணவை
முடிவு செய்ய !

தோற்கடித்தனர்
வரி வசூலிப்பில்
இங்கிலாந்துக்காரனை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (29-Oct-17, 4:03 pm)
பார்வை : 263

மேலே