கருவறை எனக்கில்லை கடவுளை நான்சபிக்க

உருபெறும் வரையில்
கண்ணே உனைசுமக்க...!
கருவறை எனக்கில்லை..
கடவுளை நான்சபிக்க..!

இறையருள் வரமே
இல்லறத்து உரமே....உனை
தோள்மீது சுமந்தே
நாள்எல்லாம் மகிழ்கிறேன்...!

உன்பிஞ்சு பாதங்கள்
என்மார்பில் வைரங்கள்...!
தலைமேல் மழலைதெய்வம்
தரைதொடா உவகையில் நான்...!

தலைமேல் சாய்ந்தாடும்
தங்க தாமரையே...!
உந்தை உள்ளம் கரையுதடி
உன்சிறு கால்விரல் அழகினிலே..!

எழுதியவர் : காசி.தங்கராசு (31-Oct-17, 2:34 am)
பார்வை : 107

மேலே