நான் அன்று

அணைவருக்கும் வணக்கம், இன்று நான் உலக அளவில் புகழ் பெற்ற ஒரு விமான ஓட்டி. உலகின் சிறந்த விமான ஓட்டியில் சிறந்தவன் என்று என்னை தேர்வு செய்து உள்ளனர். அதற்காக எனக்கு பதக்கம் வழங்குவதற்க்காக என்னை அழைத்துள்ளனர். அதற்கு முன் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.

என் முகவரி என்ன என்று சொல்லும் முன் முதலில் சில தெய்வங்கள் என்று சொல்லும் என் ஆசிரியர்களையும்; நான் கோவிலாக வணங்கும் சில ஆதரவு இல்லங்களையும் அறிமுகப்படுத்திக் காட்டுகிறேன்.

அன்று ஒருநாள் நான் வீதியில் அழுதுக்கொண்டிருந்தேன். எத்தனையோ மனிதர்கள் என்னை என்னை கடந்து சென்றனர். அதில் " மனித நேயம்" என்ற பெயருக்கு எடுத்துக்காட்டாக மனிதன் ஒருவர் என் விரல்களை பிடித்துக் கொண்டுபோய் ஒரு ஆதரவு இல்லத்தில் சேர்த்தார்.

அன்பின் மொழிகளையும், அறவணைப்பையும் என்னவென்று அந்த ஆதரவு இல்லத்தில் தான் கண்டேன். பின்னர் என்னை யார் என்று எனக்கு ஆசிரியர் ஒருவர் காட்டினார். விடா முயற்சி என்ற ஒன்று என்னை விட்டு விலகாமல் என்னுடன் இருக்க அவர் பல அறிவுரைகளை கூறினார். அது என்னை ஆகாயம் என்ற ஒன்றை நான் அண்ணாந்து பார்க்க வைத்தது. அப்படி அண்டாந்து பார்த்த என் கழுத்து அதனுடனே பறக்கத் தொடங்கியது, ஆசிரியர் மற்றும் ஆசிரமங்களின் உதவியுடன்.

இருவருடைய உடலுறவில் உயிராக உதித்து நான் உலகை பார்க்க வந்த சில காலங்களிலேயே உணர்வுகளை வெறுத்தவர்கள் ( என் தாய் தந்தை) விவாகரத்து என்ற பெயரில் வீதியில் விட்டுச் சென்றனர். விதி என்று நினைத்து வீதியில் கிடந்தவனை அன்று மனித நேயம் கொண்ட ஒருவர் அன்பை காட்டும் வகையில் ஆதரவு இல்லத்தில் சேர்த்தார். அடைக்கலம் கொடுத்த அந்த இல்லத்தில் ஆசான் ஒருவர் என்னை அகில உலகம் பார்வையிட செய்தார். அதன் விளைவாக இன்று உங்கள் முன் இன்று நிற்கிறேன். அனாதையாக இருந்த போதும் ஒருவர் காட்டிய அன்பின் வடிவில் உலக அறிமுகம் ஆகிவிட்டேன்.

அன்னை, தந்தை என்று அன்போடு விளையாடும் குழந்தைகளின் மத்தியில் விவாகரத்து செய்தவர்களின் மகன் என்று வீதியில் நின்றேன்; நான் அன்று.


இப்படிக்கு
--- அடையாளம் இருந்தும் அதனை
(அன்னை தந்தை) அவமானமாக நினைப்பவன்-----

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (31-Oct-17, 6:47 pm)
Tanglish : naan andru
பார்வை : 209

மேலே