மழை
துளி துளியாய் துள்ளி
குதிக்கும் துளிகள்!!!
மணி மணியாய் மனதை
மகிழ்விக்கும் மணிகள்!!!
மழை நிற்க காத்திருந்தேன்,
எனை கடந்தன சில குடைகள்,
என் மனதில் ஒலித்த
ஒரு கேள்வி,
ஏன் எவரும் அவர்
குடையில்
எனை ஏற்கவில்லை?
என்றெண்ணி என் எண்ணம்
உருகின மழை துளியாய்,
பொதுநலமாய் பெய்யும்
மழை,
சுயநலமாய் நீ
பிடிக்கும் குடையின்
ஒரு ஓரம் தந்தால்,
உன் சுயநலம் கூட
உடையும்
மழைதுளியியாய்!!!!!
மனோஜ்