கிராமம் நகரமானால்
கிராமம் நகரமானால்!!!
பல தலைமுறை பண்பாடு
பாழ்படும்
அன்று
விவசாய பள்ளிகள்
இன்று
பூமித்துளையிடும் கருவிகள்....
காற்று தரும் சுகம் - அதை ரசித்து
மழைதுளியும் முத்தமிடும்
பூமியை -இன்று
மழையும் பயம் கொள்கிறது
எம் நிலத்தின் நிலை கண்டு..
மாதம் மாரி எட்டிப்பார்க்க
விதைதான் விவசாயத்தை..
மாரியும் பொய்த்து - கலப்பை ஏந்திய
மனிதனும் போகிறான்....
நகர வீதிதோறும் மருத்துவம்
கிராம பாட்டியின் -கை
மருத்துவத்திற்கு ஈடில்லை
வடக்கு வளர
தெற்கு சுருங்குகிறது
நாகரிக வளர்ச்சிக்கு
பழி
கிராமம்!!!
நகரம் கிராமமானால்
செயற்கை கோளும் செய்யும்
விவசாயம்....
-மூ.முத்துச்செல்வி