காட்சி வரம்

நெடுநாள் புரிந்த தவத்தை மெச்சி
இறைவன் காட்சி தந்தான்

நேரடி வரம் வேண்டாம்
ஆசைகள் அடைய வழி சொல் போதும் - என்ற நிபந்தனையில்...

புகழ் வேண்டும் என்றேன்.,
பிறர்முகம் முன்
சங்கீர்த்தனம் பாடென்றான்:

புகழ் வேண்டாம்
புகழில்லா கவிஞனாகிட
போதுமென்றேன்.,
காசு - கஞ்சியின்றி
வாழ்ந்திடு என்றான்:

மதிப்பு மரியாதை
கிடைக்காதே என்றேன்.,
யாசித்தல் நிறுத்திடு என்றான்

நிறுத்தி விட்டேன் என்றேன்..,
'நான் வருகிறேன்' - என சொல்லி
மறைந்து போய்விட்டான்
வரம்கொண்டு வந்த என் இறைவன்

வரம் கொடுக்காமல் போனாலும் -அவன்
காட்சி கிடைத்துவிட்டது
காட்சியே வரமாகிப்போனது

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (6-Nov-17, 10:39 pm)
Tanglish : kaatchi varam
பார்வை : 329

மேலே