இயற்கை
குதூகலக் குரலில் கூவும்,
கருங் குயிலதன்
குரலுக்கு இணையுண்டோ?
தோகை விரித்தாடும்
வண்ண மயிலதன்
நடனதிர்க்கிணையுண்டோ?
மென்னடைப்போடும்
வெண் அன்னமதன்
நடைக்கிணையுண்டோ?
என்னுடலைத் தழுவும்
மென் தென்றலதன்
மென்மைக்கிணையுண்டோ ?
வண்ணப்பூக்களின்
தங்கத் திரவமெனும்
இனிப்புத் தேநதன்
இனிப்புக்கிணையுண்டோ?
வண்ணாதிப்பூக்களின்,
வண்ணக்கலவையதன்
வகைகளுக்கு இணையுண்டோ?
காலைக் கதிரவன்,
கண்ணோக்கு படுமுன்னர்,
ஏங்கித்தவிக்கும் பனித்துளிகளின்,
பாசத்திற்கு இணையுண்டோ?
காமதேவன் எய்யத்தவிக்கும்
வானவில்லதனின்
வண்ணதிர்க்கிணையுண்டோ?
கண்ணயராமல் கடலைகள்
அள்ளித்தரும் நுரைகளது
கால்வருடி வினவுமந்த
இன்பத்திற்கு இணையுண்டோ?
இயற்கைத் தரும் இன்பமது,
நம் சுற்றி பல இருக்க,
நோக்கமது சரி பெற்று,
மகிழ்ச்சியுற நன் முனைவோம்!
சம்பத்