தமிழக மீனவர் வாழ்க்கை
கோட்டை கோபுரத்தை கண்டதில்லை ,
கோழி கூப்பிட எந்திததுண்டு ,
என்றுமே , இயற்கையை கண்டு அஞ்சியது இல்லை ,
இன்று, இலங்கையை கண்டு அஞ்சியது உண்டு ,
வீசிய வலையில், மீன் கிடைக்காமல் திரும்பியதில்லை ,
கிடைத்த மீனை கொண்டே ,என் வீட்டில் அரிசி வெந்ததுண்டு ,
திரும்பி வருவேனோ , என்று ஜோசியத்தை நம்பியது இல்லை ,
நான் வணங்கும் கடல் தேவதையை நம்பியது உண்டு ,
என் வாலிப பசிக்கு , கன்னிகளுக்கு வலை வீசியது இல்லை ,
என் வயுற்று பசிக்கு கடலில் வலை வீசியது உண்டு ,
மீனு தின்ன உடம்பு ,மண்ணில் வீணாக போனதில்லை ,
பிறருக்கு பயனாக என்றுமே வாழ்தததுண்டு
என் வியர்வை துளி ,நிலத்தில் பட்டதில்லை,
ஆனால், எங்கள் வியர்வை துளி ,கடலில் பட்டு கடல் நீர் உப்பானதுண்டு
நாங்கள் யாருக்கும் துரோகம் நினைத்ததில்லை ,
ஆனால், தொழிற்சாலைகளின் கழிவுகள் கடலில் கலந்ததுண்டு..
கான்வென்ட் பிள்ளைகள் போல பணம் கொடுத்து தொழிலை கற்றதில்லை,
பிறக்கும்போதே நீச்சல் அடித்து பழகியது உண்டு ..
என் வீட்டு பிள்ளைகள் கர்நாடக சங்கீதத்தை அறிந்ததில்லை,
ஆனால், கடலின் ஆழத்தை அறிந்ததுண்டு ..
நாங்கள் கணினியை கண்டிருக்கவில்லை ,
ஆனால் , கலங்கரை விளக்கத்தை கண்டதுண்டு .
இதுவரை வாழ்கையில் கரை சேர்ததில்லை ,
ஆனால் , நிதமும் கரை சேர்வதுண்டு ...