உணர்வீர் நன்றே
பூட்டிவைத்த பொன்பொருளும் நிலைப்பதில்லை என்பதனைப்
***புரிந்து கொண்டால்
ஆட்டிவைக்கும் அகம்பாவம் விட்டகன்றே உள்ளத்தில்
***அமைதி பூக்கும் !
மீட்டெடுக்க இயன்றிடுமோ இழந்துவிட்ட இளமைதனை
***மெய்யாய்ச் சொல்வீர் !
ஊட்டியூட்டி வளர்த்திடினும் யாக்கைக்கும் அழிவுண்டென்(று)
***உணர்வீர் நன்றே !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
