கலங்காதிருங்கள்

வறுமை வாயிலிட்ட
என் வாலிபத்தை

வேகத்தை குறைத்த
என் சோகத்தை

வெறுமையை உமிழ்ந்த
என் தனிமையை

வன்முறையில் சிதைந்த
என் பெண்மையை

எம்முறையுமுமில்லாது
இதோ இம்முறை
இக்கவிக்குவியலுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன்

கலைக்கண்ணோட்டத்தே
கலைத்துப் பார்ப்பவர்களே
கண்கள் கலங்காதிருங்கள்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (18-Nov-17, 4:58 pm)
பார்வை : 122

மேலே