வாசகன்

வார்த்தைகள்...
நடந்தால் வசனம்;
நடனமாடினால் கவிதை.

சொற்களை...
சிதறினால் வசனம்;
செதுக்கினால் கவிதை.

நல்லதொரு
கவிதை கிடைத்திடும் போது
கிடைத்துவிடுகிறான்
நல்லதொரு....
வாசகன்!

எழுதியவர் : கவிஞர்.பே.இராஜேந்திரன் (21-Nov-17, 8:07 pm)
சேர்த்தது : பவித்ரா ஸ்ரீ
Tanglish : vaasagan
பார்வை : 88

மேலே