நட்பெனும் சிற்பத்தை...

தூர நின்று பார்க்கிறேன்
விலகிப்போக அல்ல
தூரம் துயரமாகிவிடக்கூடாது
என்ற எண்ணத்தில்...

வார்தைகளில் வழுக்குகிறேன்
மௌனமாய்ப்போக அல்ல
வார்த்தை வாதமாகிவிடும்
என்ற அச்சத்தில்...

ஆனாலும்

எழுத்துளியால்
செதுக்கினேன்
நட்பெனும் சிற்பத்தை...

விழி வரைந்த
ஓவியமாய்...
நட்பே நட்பை
உணரவேண்டுமென்பதற்க்காக...

எழுதியவர் : சலீம் (30-Jul-11, 9:09 am)
பார்வை : 648

மேலே