என் முதல் கனவு கவிஞர் இரா இரவி

என் முதல் கனவு ! கவிஞர் இரா .இரவி !
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்
இனிய சமதரும சமுதாயம் என் முதல் கனவு !
இருப்பவன் இல்லாதவன் என்ற நிலையின்றி
ஏற்றத் தாழ்வுகள் இன்றி சமநிலை !
அடிப்படைத் தேவைகள் என்பதை
அரசே வழங்கி விடும் மக்களுக்கு !
தனியார் உடைமை எதுவுமின்றி
தரணியில் பொதுவுடைமை வேண்டும் !
கோடிகளைப் பதுக்குவோர் இல்லை
கொடிகளுக்கு வேலை இல்லை !
செல்வக் கொழிப்பும் இல்லை
செல்வாக்குகளும் இல்லை !
ஏழை பணக்காரன் இல்லை
எல்லோருக்கும் சமநிலை !
மாட மாளிகையும் இல்லை
ஓலைக் குடிசையும் இல்லை !
பசியும் பட்டினியும் இல்லை
பணக்கார ஆணவம் இல்லை !
கந்து வட்டி இல்லவே இல்லை
கொலை தற்கொலையும் இல்லை !
கல்வியிலும் ஏற்றத் தாழ்வு இல்லை
கல்வி அனைவருக்கும் சமமாக !
சாதி மதம் இல்லவே இல்லை
சாதி மத சண்டையும் இல்லை !
அனைவருக்கும் சம வாழ்வு
அன்பு இருக்கும் நிறைவாழ்வு !