நீயும்,நானும்

உன்னழகை என்னென்று சொல்வேன்
எப்படி என்று எழுதிடுவேன் -கவி நான்
வார்த்தைகள் கிடைக்கவில்லை என்று
எண்ணி எண்ணி ஏங்கியபோது -என்னுள்
எண்ணம் ஒன்று தோன்றியது - ஏன் நான்
உன்முன் ஒரு நிலைக் கண்ணாடியாய்
நின்றிடலாமே, என்னவளே அந்த
கண்ணாடியில் உன் அழகெல்லாம் கண்டு
நீ ரசிக்க , கண்ணாடி நான் என்னுள்
நீயல்லவோ இருக்கின்றாய் , இனி
உன்னழகை சொல்லிடவோ, எழுதிடவோ
யோசிக்க மாட்டேன் ....................ஏனென்றால்
நீ ஏன் பேரழகி அதைத்தாங்கும் நிலைக்கண்ணாடி
அல்லவோ நான் ......................
ரோகிணியின் அழகை ரசிக்கும்
நிலவாம் நிலைக்கண்ணாடி போல்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Nov-17, 10:43 am)
பார்வை : 707

மேலே