இப்படி ஒரு ஆசை
காவேரி கரையோரம்
வெள்ளி மணல் மீது
அந்தி பொழுதினிலே
தென்றல் வீசிவர
என்னவள் கைகோர்த்து
அளவளாவ உலாவிவர ஆசை
பின்னர் வெள்ளி மணலில்
பௌர்ணமி நிலவின்
வரவிற்காக காத்திருந்து
வந்த பின்னர் நிலவொளியில்
அவளுக்கு அவள் மீது
நான் புனைந்த காதல்
கவிதையைப் படித்து காட்டி
அதற்கு அவள் ராகம் போட்டு
குயிலொத்த தன் குரலால்
பாடி காட்ட, அந்த பாட்டை
ரசித்து அவள் மடியில் தலை வைத்து
அந்த நிலவு லோகம் பவனி வர ஆசை