நீதான் அந்த உமர் கய்யாமின் கவிதையோ

வீணையின் ராகங்கள்
வானவில்லின் வண்ணங்கள்
உன் இதழ்களின் மௌனம்
இது தான் காதலின் பிரதி பிம்பமோ !
நீரோடைச் சலனங்கள்
நீந்துகின்ற விழிகளில் கயல்கள்
வீசுகின்ற தென்றலின் கீதம்
இது தான் இயற்கையின் தரிசனமோ !
அந்தியின் அழகிய சந்திர உதயம்
மாலை தரும் மயக்கம்
போதை தரும் உன் புன்னகைக் கிண்ணம்
நீதான் அந்த உமர் கய்யாமின் கவிதையோ ?