உன் நினைவை கொல்வேன்

உருகிய என் எண்ணங்கள் உறைகின்றது
உடையாமல் உன் மௌனங்கள் தொடர்கிறது
உனக்காக கடும் வெய்யலில் காத்திருந்தது
வியர்வைத்துளிகள் வெந்நீராய் சுடுகின்றது

திசைகள் எட்டும் திரிகிறேன்
ஓர் திசையிலாவது உன்
பார்வையில் படுவேனென்று
ஏழு திசையெங்கும் உன் விழிகளை
ஏவல் செய்கிறாய்
நான் நிற்கும் திசையை மட்டுமே
ஏனோ பூட்டுகிறாய் ?

மயிர் கூச்சிய தருணங்கள்
நீ என்னுள் வந்தது
உயிர் கூசுகின்றது வாழ பிடிக்காமல்
இத்தருணம் நீ விலகிச் செல்வது !

கள் உண்டு மனதை கொல்வேன் !
கள்ளிப் பால் உண்டு உயிரை கொல்வேன் !
எதை உண்டு உன் நினைவை கொல்வேன் ?

எழுதியவர் : (30-Nov-17, 2:30 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 702

மேலே