அம்மா

கடவுள் எனக்கொரு
வரம் கொடுத்தால்
வரமாய் உனையே ஈன்றெடுப்பேன்..
உன் கருவிலே
உதித்த நான்
என் கரமதில்
நீ தவழ..
உன்னை தாலாட்டி,சீராட்டி
பின்பு பாராட்டி
கனிவோடு வளர்க்க,
என்னிதயமின்றே
ஏக்கம் கொள்கிறது..
கருணையை
அலைகடலாய் திரட்டி
பரிவோடு பாசமதை ஊட்டி,
அள்ளியணைத்து
நீ தந்த முத்தங்கள்
மெய்சிலிர்க்கின்றது..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (1-Dec-17, 2:30 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
Tanglish : amma
பார்வை : 169

மேலே