நினைவு நின்று கொல்லும்

எழுத நினைக்கும் எழுதுகோல்
அதை ஏற்க மறுக்கும் காகிதம்

சொல்லத் துடிக்கும் உதடு
அதை கேட்கும் காதோ செவிடு

உறங்க நினைக்கும் கண்கள்
நம்மை உறங்க விடாத பெண்கள்

அரவணைக்க ஏங்கும் தேகம்
நீ அருகில் இல்லை சோகம்

இன்னும் ஏன்? இந்த தனிமை
நீ தடம் மாறிச்சென்றதால் வந்த கொடுமை

உன்னை மறக்க நினைக்குது உள்ளம்
ஆனால் உன் நினைவு நின்று கொல்லும்..!!

எழுதியவர் : அருணன் கண்ணன் (1-Dec-17, 4:23 pm)
பார்வை : 335

மேலே