மீட்டுக்கொடு

காதல் செய்தவன் நான்
காலம்முழுதும் வாழ்பவன் எவனோ !

முத்தத்தில் குளித்தவன் நான்
மூழ்கி முத்தெடுப்பவன் எவனோ !

மணமுடிக்க நினைத்தவன் நான்
மாங்கல்யம் தருபவன் எவனோ !

தாலாட்டைப் பயிற்றுவத்தவன் நான்
மடிசாய்ந்து கேட்பவன் எவனோ !

சாதிக்க முயற்சித்தவன் நான்
சரித்திரம் படைப்பவன் எவனோ !

இறைவா என்னோடுவாழ்ந்த என்னுயிரை
மீட்டுக்கொடு என்னிடமே !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (4-Dec-17, 9:16 am)
பார்வை : 209

மேலே